நான் கருவாக இருக்கும் போதே அப்பா அம்மாவிடம், ஆம்பிளைப் பிள்ளையெனில் அப்பப்பாவின் பெயரையும் பொம்பிளைப் பிள்ளையெனில் அப்பம்மாவின் பெயரையும் வைப்போமா எனக் கேட்க அம்மாவும் சரியென்று விட்டார். பிறந்தபின் என்ன நினைத்தாரோ தெரியாது. என் முதல் பெயராக அப்பம்மாவின் அரைவாசிப்பெயரையும் இரண்டாவது பெயராக இன்னொன்றையும் வைத்தார். நிச்சயமாக இந்த இரு பெயர்களையும் ஒன்றாகக் கொண்ட வேறொருவர் இல்லை என்றே நினைக்கிறேன். எனது பெயரை எனக்கு மிகவும் பிடிக்கும். I am very much sentimentally attached to it. அன்னா XX அப்பாவின் பெயர் தான் எனது முதல் அடையாளம். இதை மாற்றினாலோ எனது முதற் பெயர்களின் பின் வேறு பெயர் சேர்த்துப் பார்த்தாலோ நானென எனக்குத் தோன்றியதில்லை. என் பெயரோடு அம்மாவின் பெயரையும் எப்படியாவது சேர்க்க வேண்டுமென நினைத்தேனே தவிர, எனக்கு திருமணத்தின் பின் பெயர் மாற்றுவதென்பது எப்போதுமே பிரச்சனையாகவே தோன்றியது.
Showing posts with label தன்னுரிமை. Show all posts
Showing posts with label தன்னுரிமை. Show all posts
