Friday, October 12, 2012

மனிதக்குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதை விலங்கிலிருந்து கூர்ப்படைந்ததை நேரில் பார்த்தீர்களா என்ன?

நேரில் கண்டால் தான் உண்மையெனில் எந்தவொரு குற்றத்திற்கும் எவரையும் தண்டிக்க முடியாது. குற்றம் நடந்து பலமணிநேரம் ஏன் பல நாட்களிற்குப் பின் தான் புலனாய்வாளர்கள் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கு விடப்பட்டிருக்கும் தடயங்களைக் கவனமாக ஆராய்ந்து குற்றம் எவ்வாறு யாரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணித்துக் குற்றவாளியைப் பிடிப்பார்கள். இதில் அநேகமானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்.நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்களெனில் பல விடயங்கள் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
 
அதனால் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என யாராவது சொன்னால், நீ என்ன நேரில் பார்த்தாயா? என்பது ஒரு நல்ல கேள்வியன்று. அதோடு, உங்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும் அவர்கள் நேரில் கண்டிருக்க சாத்தியமே இல்லை என்று. அதனால் உங்களுக்கு உண்மையில் கூடிய தகவல் தேவையெனில், நீங்கள் கேட்க வேண்டியது, உனக்கு எப்படி அது தெரியும்?

Monday, October 8, 2012

அறிவியலில் theory/கோட்பாடு என்றால் என்னவென்று பார்க்கலாமா?

"அறிவியலாளார்களால் நிரூபிக்கப்படாத தியரிகளை வைத்து, அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் முட்டாள்தனமாக நேரில் பார்த்தது போல் நம்புகிறீர்கள். நிரூபிக்கப்படாததால் தான் அது தியரி, நிரூபிக்கப்பட்டால் அதை உண்மையென்று சொல்வார்கள் தெரியுமோ" என்றிருந்த ஒரு பதிவு வாசிக்க நேர்ந்ததால் இந்தப் பதிவு. அந்தப் பதிவு எழுதியவர் மட்டுமல்ல சமூகத்தில் பலர் இவ்வாறே கருத்துக் கொண்டிருப்பதால் இந்த‌ அறிவியல் அடிப்படைப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன்.

Friday, October 5, 2012

பரிணாமம் - ஆதாரங்களற்ற கொள்கை/சும்மா ஒரு தியரி???

via myconfinedspace

நாத்திகத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த பாகம் இயலுமானளவு விரைவில் போடுகிறேன். அதற்கு முன் வலையில் அண்மையில் , அறிவியலில் theory, facts ஜப் பற்றி எந்தளவிற்கு விளக்கமின்றி, தமது விளக்கமின்மையில் கொஞ்சம் கூட சந்தேகமற்று மிகுந்த நிச்சயத்துடன் அதைப் பறைசாற்றி, விஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் சில பதிவுகள் படிக்க நேர்ந்ததால் அடுத்த பதிவில் இதைக் கொஞ்சம் விளக்கி விட்டுத் தொடர்கிறேன்.