Showing posts with label அடிப்படை அறிவியல். Show all posts
Showing posts with label அடிப்படை அறிவியல். Show all posts

Monday, December 22, 2014

மரபியலுக்கு அப்பால்.............

போன பதிவில் தாய்மார் கற்பமாக இருக்கும் போதோ அல்லது தாயின் தாய் தாயுடன் கற்பமாக இருந்த போதோ அனுபவித்த பஞ்சம், போர் போன்றவற்றால் பிள்ளைகள் அல்லது பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை வருவதற்கான நிகழ்தகவைக் கூட்டுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன். எமது தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டிமார் அனுபவித்த‌ கெடுதலான வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுடன் அவர்களின் எதிர்காலச் சந்ததியினர் வாழாதபோதும் , மரபணு மாற்றங்கள் நடக்காத போதும் அவர்களை எப்படிப் பாதிக்கிறது?
 
ஒத்த இரட்டையரை இயற்கையால் உருவாக்கப்பட்ட நகலிகள் (clones) என்று சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு விந்தும் ஒரு முட்டையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட இணைவுப்பொருள் (zygote) பின் இரு கருக்களாகப் பிரிந்து விரித்தியடைவதால் உருவாக்கப்படுகிறார்கள். அதனால் ஒத்த இரட்டையர் இருவரினதும் மரபு ரேகை (genome) ஒரே மாதிரி இருக்கும். அதனாலேயே அவர்கள் பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரி இருப்பார்கள். ஆனால் உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் வளர வளர அவர்களில் பல வித்தியாசங்கள் தென்படும். ஒத்த இரட்டையருக்கு ஒரே மாதிரியான மரபு ரேகை இருப்பதுடன் ஒரே சூல் வித்தகத்துடனேயே கருப்பைக்குள் விருத்தி அடைகிறார்கள். அத்துடன் அவர்களின் சிறு பிராய வாழ்க்கை அநேகமாக ஒரே மாதிரியானதாகவே இருக்கும். அப்படி இருந்தும் எல்லா ஒத்த இரட்டையருக்கும் ஒரே நோய் வருவதில்லை. சில சந்தர்ப்பங்களில் ஒத்த இரட்டையரில் ஒருவருக்கு மட்டுமே புற்றுநோய், autism போன்ற நோய்கள் வருவது, இருவருகிடையில் உடல் எடையில் மிகுந்த வேறுபாடு என வேறுபாடுகளை உணர்த்தும் பல உதாரணங்கள் உள்ளன. ஒரே மரபு ரேகை இருக்கும் போது எப்படி இது சாத்தியமாகும்? ஒத்த இரட்டையருக்கிடையிலான வேறுபாடுகளுக்கான அடிப்படை என்ன?

Tuesday, March 5, 2013

அடிப்படை அறிவியல் கல்வி

அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.

Friday, October 12, 2012

மனிதக்குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதை விலங்கிலிருந்து கூர்ப்படைந்ததை நேரில் பார்த்தீர்களா என்ன?

நேரில் கண்டால் தான் உண்மையெனில் எந்தவொரு குற்றத்திற்கும் எவரையும் தண்டிக்க முடியாது. குற்றம் நடந்து பலமணிநேரம் ஏன் பல நாட்களிற்குப் பின் தான் புலனாய்வாளர்கள் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கு விடப்பட்டிருக்கும் தடயங்களைக் கவனமாக ஆராய்ந்து குற்றம் எவ்வாறு யாரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணித்துக் குற்றவாளியைப் பிடிப்பார்கள். இதில் அநேகமானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்.நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்களெனில் பல விடயங்கள் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
 
அதனால் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என யாராவது சொன்னால், நீ என்ன நேரில் பார்த்தாயா? என்பது ஒரு நல்ல கேள்வியன்று. அதோடு, உங்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும் அவர்கள் நேரில் கண்டிருக்க சாத்தியமே இல்லை என்று. அதனால் உங்களுக்கு உண்மையில் கூடிய தகவல் தேவையெனில், நீங்கள் கேட்க வேண்டியது, உனக்கு எப்படி அது தெரியும்?

Monday, October 8, 2012

அறிவியலில் theory/கோட்பாடு என்றால் என்னவென்று பார்க்கலாமா?

"அறிவியலாளார்களால் நிரூபிக்கப்படாத தியரிகளை வைத்து, அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் முட்டாள்தனமாக நேரில் பார்த்தது போல் நம்புகிறீர்கள். நிரூபிக்கப்படாததால் தான் அது தியரி, நிரூபிக்கப்பட்டால் அதை உண்மையென்று சொல்வார்கள் தெரியுமோ" என்றிருந்த ஒரு பதிவு வாசிக்க நேர்ந்ததால் இந்தப் பதிவு. அந்தப் பதிவு எழுதியவர் மட்டுமல்ல சமூகத்தில் பலர் இவ்வாறே கருத்துக் கொண்டிருப்பதால் இந்த‌ அறிவியல் அடிப்படைப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன்.

Tuesday, February 14, 2012

மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு

எச்சரிக்கை:
பள்ளியில் பரீட்சையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டிருப்பின், அந்தத் தலைப்பிற்கு பொருத்தமில்லாத வகையில் பதில் சிலர் எழுதுவார்கள். இதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் சொன்ன, மனதில் பதிந்த ஒரு கதை: தென்னையைப்பற்றி கட்டுரை எழுதவும் என்ற கேள்விக்கு ஒரு மாணவன், கட்டுரையை " ஒரு பண்ணையாள் தன் பசுவை மேய்வதற்காக காணியிலுள்ள தென்னை மரமொன்றில் கட்டினான்" என்று தொடங்கிப் பின் பசு புல் மேய்தலைப் பற்றித் தொடர்ந்து கட்டுரை எழுதியிருந்தானாம்.

அதே மாதிரி இப்பதிவு "மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு" என தலைப்பிடப்பட்டிருப்பினும், அதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டு பின் மரபணு மாற்றங்கள், பரிணாமம், வைரஸ் தொற்றுநோய்கள், மரபியல் விதித் தொகுப்பிற்கும் கணனி மொழிக்குமான வித்தியாசம், stem cells என பல்வேறு விடயங்களைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறது. மொத்தத்தில் வாசிக்கவில்லை என முகுந்தம்மாவிடம் சொல்லிவிட்டு, அப்படி என்னதான் இருக்கிறது இந்தக் கட்டுரையில் எனப் பார்க்கப் போன வினையின் விளைவே இப்பதிவு.

Sunday, February 12, 2012

மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு

எச்சரிக்கை:
பள்ளியில் பரீட்சையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டிருப்பின், அந்தத் தலைப்பிற்கு பொருத்தமில்லாத வகையில் பதில் சிலர் எழுதுவார்கள். இதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் சொன்ன, மனதில் பதிந்த ஒரு கதை: தென்னையைப்பற்றி கட்டுரை எழுதவும் என்ற கேள்விக்கு ஒரு மாணவன், கட்டுரையை " ஒரு பண்ணையாள் தன் பசுவை மேய்வதற்காக காணியிலுள்ள தென்னை மரமொன்றில் கட்டினான்" என்று தொடங்கிப் பின் பசு புல் மேய்தலைப் பற்றித் தொடர்ந்து கட்டுரை எழுதியிருந்தானாம்.

அதே மாதிரி இப்பதிவு "மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு" என தலைப்பிடப்பட்டிருப்பினும், அதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டு பின் மரபணு மாற்றங்கள், பரிணாமம், வைரஸ் தொற்றுநோய்கள், மரபியல் விதித் தொகுப்பிற்கும் கணனி மொழிக்குமான வித்தியாசம், stem cells என பல்வேறு விடயங்களைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறது. மொத்தத்தில் வாசிக்கவில்லை என முகுந்தம்மாவிடம் சொல்லிவிட்டு, அப்படி என்னதான் இருக்கிறது இந்தக் கட்டுரையில் எனப் பார்க்கப் போன வினையின் விளைவே இப்பதிவு.