Wednesday, October 19, 2011

மேடைப் பயமும் நானும்


ஆய்வு செய்ய மிகப் பிடிக்கும் என்று போன பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஆனால் அதையே தொழிலாக எடுக்க முடிவு செய்தால் ஆய்வுகூடத்திலேயே இருந்துவிட முடியாதென (I would rather do that), முனைவர் பட்டத்திற்கான ஆய்வைத் தொடங்கிய சிறிது காலத்தில் தெரிந்து கொண்டேன். ஆய்வைப் பற்றி அது தொடர்பான கருத்தரங்குகளிலும் வேறு இடங்களிலும் பேசுவதும் ஆய்வு செய்யுமளவு செய்யவேண்டும். அது எனக்கு மிக மிகப் பிரச்சனையான விடயம். எனக்கு மிகத் தீவிரமான மேடைப் பயம் இருந்தது/ இப்பவும் ஓரளவு இருக்கிறது.

இந்தப் பதிவில் மேடைப் பேச்சில் எனது அனுபவங்களை, நான் செய்த/ எனக்கு ஏற்பட்ட embrasing moments ஜப்பற்றி பிறகு எப்பவாவது பார்க்கலாம் என்றிருந்தேன். இப்போ தொழில் தொடர்பான பதிவுகளை எழுதிய பின் அதைப்ற்றியும் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். இதைக் கூட நான் புலம் பெயர்ந்த பலரிடம் சொன்னதுண்டு. சிலருக்கு மிக அழகாகப் பொது இடங்களில் பேச வரும். ஆனால் எல்லோருக்கும் இயற்கையிலேயே அழகிய பேசும் திறன் அமைவதில்லை. சிலருக்கு பேசும் தகவல்கள் தெரியாவிடினும் என்ன கதைக்கிறோமெனத் தெரியாமலே மிகுந்த நம்பிக்கையுடன் கதைப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.

இங்கு வந்த புதிதில் புது இடம், புது மனிதர்கள், புதுக் கலாச்சாரம் போன்றவைகளால் தோன்றும் anxiety உடன் எனது ஆங்கிலப் புலமையில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து கொண்டது. ஒருமுறை எனது கடைசித் தங்கை இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது அவர்கல் வகுப்பிலிருந்து adventure camping சென்றார்கள். அப்போ பெற்றோர் இயலுமானால் guides ஆக வரும் படி கேடிருந்தார்கள். அப்பா guide ஆக என்னைப் போகச்சொன்னார். காலைக் கட்டித் தண்ணியில் விட்ட மாதிரி இருந்தது. போனது 11-12 வயது சிறுவர்களுடன். அவர்களுக்கு golf, அம்பு வில்லு விளையாட உதவுவது என்று பல வேலைகள். பிரச்சனை என்ன என்றால் நான் ஒருநாளும் golf விளையாடின‌தும் இல்லை/ எப்படி விளையாடுவதென்று தெரியவும் தெரியாது. சிறுவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாரி ஏதோ உதவி செய்து முடித்து கடை நாள் இரவு, சிறுவர்களுக்காக ஆசிரியர்களும் பெற்றோரும் ஒரு show வைப்பதென்று தலைம ஆசிரியர் சொன்னார் (எங்கையிருந்துதான் இந்த மாதிரி idea எல்லாம் எடுத்தார்களோ தெரியாது). என்னை எதற்கும் கூப்பிடக் கூடாது கடவுளே என்று வேண்டாத தெய்வமில்லை. :) அதனால் ஒரு பயனும் வரவில்லை. எனது part மேடையில் ஏறி அதில் வைத்திருந்த ஒரு பாத்திரத்திலிருந்ததை ஒரு கோப்பையில் ஊற்றிக் குடிப்பது மாதிரி நடித்துவிட்டு "This is a nice cup of Milo" என்று சொல்வது மட்டும் தான். அரங்கிலிருந்தோர் 11-12 வயதுச் சிறுவர்கள். அதைச் சொல்லும் போதும் கூடக் குரல் நடுங்கியது. இதெல்லாம் சும்மா எவருடனும் இருந்து கதைக்கும் போதல்ல ஒரு கூட்டத்திற்கு முன்னால் நிற்கும் போதே.

பல்கலைக் கழகத்தில் முதலிரு வருடங்களில் வகுப்புகளில் பெரிதாக பேச்சு assessments இருக்கவில்லை. மூன்றாம் நான்காம் ஆண்டுகளிலேயே ஒரு பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை மீளாய்வு செய்து வகுப்பிற்குச் சொல்வது, அல்லது கற்பித்த ஒரு பாடத்தைப் பற்றிப் பேசுவது என assessments இருந்தது. I hated giving seminars. ஆனால் அது assessment இன் ஒரு பகுதி எனில் செய்து தானே ஆக வேண்டும். பல சமயம் வகுப்பிற்கு முன் நின்று பேசும் போது குரல் மிக நடுங்கும். எனக்கே நான் என்ன கதைக்கின்றேன் என விளங்கவில்லை சில சமயங்களில். என்ன தான் முதலில் பல தடவை பேசிப் பார்ப்பினும், எழுந்து வகுப்பின் முன் நின்றதும் மூளை முழுதும் வெறுமையாகப் போன மாதிரி ஒரு உணர்வு. இந்நாட்டில் உள்ள ஓரு நன்மை, நீ ஒன்றுக்கும் உதவாது, நீ எல்லாம் படிப்பதே waste என்று ஒரு போதும் சொல்ல மாட்டினம். நீ செய்ததில் எது நல்லது என்று சொல்லி அதற்கும் பாராட்டி, எவற்றில் முன்னேற வேண்டும் என்றும் சொல்வதால், நீங்கள் முற்றாகத் தோல்வியடைந்த்ததாக ஒரு போதும் நினைக்க மாட்டீர்கள். :)

பின் முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்கியதும் ஒரு வருடத்திற்குள்ளேயே, எனது ஆராய்ச்சியின் முடிவுகள் சரிவரத் தெரிய முன்னர், எனது முதலாவது பேச்சு ஒரு மகளிர் நோய் மருத்துவர்களின் (gynaecologists) கூட்டத்தில். I was completely overwhelmed and intimidated. பேச்சின் போது குரல் நடுங்கினும் ஏதோ கதைத்து, அந்தளவு nervous ஆக இருந்ததற்கு, இடையில் மன்னிப்புக் கூடக் கேட்டேன். பேச்சு முடிந்ததும் எனது மேற்பார்வையாளர், "பரவாயில்லாமல் செய்தாய் (that was a lie :)), ஆனால் இவ்வளவு நல்ல முடிவுகளை வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆட்களிடம் மன்னிப்புக் கேட்காதே" என்று சொன்னார். :)

பல தடவை பேச சந்தர்ப்பங்கள் கிடைத்ததால் (not out of choice but out of obligation, really :)) குரல் நடுங்குவது ஓரளவுக்கு நின்று விட்டது. ஆனால் பதற்றம் நின்ற பாடில்லை. இன்னொரு இனப்பெருக்க ஆய்வுக்கான கருத்தரங்கில் எனது ஆய்வைப் பற்றிய பேச்சை முடித்து கேட்ட கேள்விகளுக்கும் விடையளித்தபின் அரங்கிலிருந்தோர் கைதட்ட, எனது கைகளும் தானாகவே தட்டத் தொடங்கின. தட்டும் கைகளைப் பார்த்துக் கொண்டே, அதிர்ச்சியில், மூளையின் ஒரு பகுதி நிப்பாட்டு, நிப்பாட்டெனவும் கைகள் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. Yeap. I was a complete nutcase.

இத்தனைக்கும் இது முடியாதென்பதால் ஆய்வையே விட்டு விடலாமா என ஒரு போதும் யோசித்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.

அதோடு பயத்தை எதிர்கொள்வதே அதைப் போக்குவதற்கான சிறந்த வழி என்பதற்கிணங்க பலமுறை முயற்சிக்கக் கிடைத்த வாய்ப்புகளால் என்னை அறியாமலே முன்னேறத் தொடங்கினேன் என நினைக்கிறேன். இக்காலகட்டத்தில், ஒரு முறை பகுதி நேர telemarketing வேலை ஒன்றிற்கான நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். அதில் Group interview உம் இருந்தது. நேர்காணலில் ஒரு பகுதியில் வந்தவர்களை சிறு கூட்டங்களாகப் பிரித்து விட்டு, ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கற்பனைப் பொருளைக் கூறி, ஒரு 10 நிமிடத்தில் அதற்கான விளம்பரம் ஒன்றை எல்லோரும் ஒன்றுபட்டு எழுதி, அக்கூட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு பங்கேற்று கதைத்தும் நடித்தும் காட்ட வேண்டும். இதயம் பட படவென்று அந்த நடித்துக் கதைத்தலின் போது அடித்த போதும், செய்தேன். அவ்வேலைக்குத் தெரிவும் செய்யப்பட்டேன். அந்நேரம் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. எதோ பெரிதாகச் சாதித்து விட்டதாக உணர்ந்தேன். வேலை கிடைத்துவிட்டது என்பதை விட, என்னால் எல்லோர் முன்னிலும் நின்று அந்த விளம்பரத்தை கதைத்து நடிக்க முடிந்ததும் and that they thought it was good enough to hire me made me so happy.

கடைசி இரண்டு ஆண்டுகளும் நடந்த post graduate student symposium களிலும் எனது ஆய்வைப் பற்றிய பேச்சுக்கு பல பரிசுகள் கூடக் கிடைத்துள்ளன. நான் முதலில் இருந்த நிலையிலிருந்து பார்த்தால் it is an amazing improvement. ஆனால் இப்போதும் எங்காவது பேச வெண்டுமெனில் முதல் நாள் நித்திரையே வராது. அத்தோடு பேசி முடிக்கும் வரை சாப்பாடு தண்ணி எதுவும் ஏறாது.

இதை என் வயதில் இங்கு புலம் பெயர்ந்து வந்து படிக்கும் போதும் நேர்காணலின் போதும் பயப்படும் பலரிடம் சொல்லியுள்ளேன். If I can do this, anybody can.

Tuesday, October 18, 2011

It's a boy! :)

Monday, October 17, 2011

Bring on the learning revolution!

திரு பாஸ்க‌ர் போன‌ ப‌திவில் கூறிய‌ க‌ருத்து,
"உங்கள் நிலைதான் எல்லோருக்கும். அது இன்றும் தொடர்வது கொடுமை. அதுவும் என்ன எனக்கு பிடிக்கும் என்று சிந்திப்பதை விட எது எனக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்பதே மாணவர்கள் தனது துறையை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அதுவே உணர்ந்து படித்தலில் இருந்து வெகு தூரம் பயணம் செய்ய துவங்கும் புள்ளியாகவும் உள்ளது. இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று. உங்கள் அனுபவங்களோடு நமது சமூகத்தின் பெரும்பாலான மாணவர்களின் நிலையோடு இணைத்து பிரச்சனையை இனம் கண்டு எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்."

உங்க‌ள் க‌ருத்திற்கு மிக்க‌ ந‌ன்றி. போதிக்கும் முறையும் ஆசிரிய‌ர்-மாண‌வ‌ர் relationship உம் நிச்ச‌ய‌மாக‌ மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை. ஆனால், "இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று" என்ற உங்கள் கருத்தை முழுதாக ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக சமூக மாற்றத்தினூடாகவே மாற்ற முடியும்.

பின்வருவது சமூகத்தில் மாற வேண்டியவை என நான் நினைப்பவை. இன்னும் பல இருக்கும். இப்போதைக்கு எனக்குத் தோன்றியவை இவையே. These are just my thoughts, hence may not be a coherent post.

Societal norms have to be changed completely.

முதலில் எல்லாத் துறைகளையும் வேலைகளையும் சமமாக மதிக்கும் தன்மை வர வேண்டும். சமூகத்தில் எல்லோரும் மருத்துவர்களாகவும் பொறியியளாளர்களாகவும் இருந்தால் மற்றைய வேலைகளை யார் செய்வதாம். இவர்கள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு எல்லாத் துறைகளும் முக்கியமே. எனது A/L வகுப்பிலேயே சில மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அறிவியல் படிக்க கொஞ்சம் கூட விருப்பமில்லை. சிலருக்கு வர்த்தகம் மிகவும் பிடித்திருந்தது. சிலருக்கு arts பிடித்திருந்தது. பெற்றோரின் கட்டாயத்தால் மட்டுமே அவர்கள் அறிவியல் வகுப்புகளில் இருந்தார்கள். பாடங்களில் விருப்பம் இருந்தாலே கிரகிக்க மிகவும் கடினமான பாடத்திட்ட முறையைக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் எப்படிப் படிப்பது? It's really sad to see many young people completely loose their love for learning because of our societal norms and education systems.

இராண்டாவது எல்லோரும் சமூகம் ஆமோதிக்கும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. பட்டதாரிகளாக இருந்தால் தான் அவர்களுக்குத் திறமை இருக்கிறது என்ற எண்ணம் மாற வேண்டும். எல்லாப் பிள்ளைகளுக்கும் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பட்டதாரியாகவேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர்களுக்கு இயலுமானளவு இருக்கும் தெரிவுகளுக்கான தகவல்களைக் கொடுத்து அவர்களையே தெரிவு செய்ய விட வேண்டும். Everyone doesn't have to be an academic, if they trully do not want to be. என் துணைவர் சொல்வார், எமது சமூகத்தில் பலர் திருமணத் தகைமைத் திரட்டில் போடுவதற்காகவே பட்டம் எடுக்கிறார்கள் என்று.

மூன்றாவது பெற்றோர் தமது வாழ்க்கையைப் பிள்ளைகளினூடாக வாழ்ந்து விட வேண்டுமென்ற எண்ணம் முழுதாக மாற வேண்டும். எனக்கு இன்னாராக வர விருப்பவிருந்தது, அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் பிள்ளையை எப்படியாவது வர வைத்து விட வேண்டுமென்பது பிழையான சிந்தனை. It puts way too much pressure on the kids. அவர்களுக்கு இயலுமானளவு வேறுபட்ட அனுபவங்களை வழங்கி, பின் அவர்களுக்கு என்ன செய்ய விருப்பம் என்பதை அவர்களின் தெரிவுக்கே விட்டு விட வேண்டும். Parents should guide the kids and let them live their own life and respect the variety of talents of each individual. பிள்ளைகளின் தனித்துவத்தன்மையை மதிக்கப் பழக வேண்டும்.

எமது சமூகத்தில் பேப்பர் தகுதிகளுக்கு மதிப்பு மிக அதிகம். எமது சமூகத்தில் அது பல நேரங்களில் எதுவும் விளங்காமல் மனனம் செய்து கூடப் பெறலாம். அதனால் ஒருவருக்கு எவ்வளவு அறிவு வருகிறதென்பது வாதாடக் கூடியது. அனுபவத்தால் பெறப்படும் அறிவிற்கு மதிப்பளிப்பதில்லை. Well, generally knowledge is not respected anyway. That has to change.

இதில் உருப்படியாக என்னவாவது சொல்லியிருக்கிறேனா எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துகளை நிச்சயம் தெரிவியுங்கள். நான் Creativity expert Sir Ken Robinson இன் கருத்துகளுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். These two videos are well worth watching. இதை தமிழாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.



Saturday, October 15, 2011

நான் ஒரு விஞ்ஞானி - 2

போன பதிவில் எழுதிய கேள்வி பதில்களோடு இங்கு நான் meet the scientist நிகழ்ச்சியில் பங்கு பற்றும் போது அநேகமான சிறுவர்கள் கேட்கும் இன்னொரு கேள்விக்கும் விரிவான பதில் எழுதலாமோ என்று நினைத்து பின் மிகவும் அலட்டுரனோ தெரியாதென விட்டு விட்டேன். ஆனால் அதில் திரு. பாஸ்கரின் கருத்து எழுதத்தூண்டியதால் எழுதுகிறேன். மிகுந்த அலட்டலே என நினைத்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

"எப்ப/எவ்வாறு உங்களுக்கு ஆய்வுதான் career என்று தெரிந்து கொண்டீர்கள்?/அத‌ற்கு என்ன‌ செய்தீர்க‌ள்?
நான் எனது பள்ளிப் படிப்பை இலங்கையில் முடித்தனான். முற்றிலும் தமிழில். அங்கு பாடத்திட்டம் மிகவும் வேறுபட்டது. 16 ஆறு வயதில் நீங்கள் எந்தத்துறைக்கு செல்லப் போகிறீர்கள் என்று முடிவு செய்ய வேண்டும். யார் இது ஒரு நல்ல திட்டம் என்று முடிவு செய்ததோ தெரியாது. எனக்கு 16 வயதில் நிச்சயமாகத் தெரியாது எனக்கு என்னவாக வர விருப்பம் என்று. அறிவியலில் விருப்பம் இருந்ததால் A/L இல் அறிவியலே எடுத்தேன். அம்மா, அப்பா நான் மருத்துவமே படிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தனர். எனக்கு என்ன விருப்பம் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்ன options இருக்கென்று கூடத் தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் ஆய்வு எனும் துறை இருக்கிறதென யாரும் விளக்கியதில்லை. அங்கு A/L science இல் மிக நல்ல புள்ளிகள் எடுத்தால் மருத்துவம் அல்லது BSc/teaching மட்டுமே செய்யலாமெனவே நான் அறிந்திருந்தேன். வேறு எதுவும் தெரியாது.
A/L எடுத்துவிட்டு நியுசிலாந்திற்குப் புலம் பெயர்ந்தபின் என்ன செய்வதென்று யோசித்து, நான் இரசாயனவியல் செய்யலாமென நினைத்திருந்தேன். ஏனெனில் எனக்கு இரசாயனவியல் நன்றாக ஓடும். ஆனால் அப்பா biomedical science செய் என்றார். அவர் சொன்னது degree முடித்ததும் இங்கு மருத்துவத் துறைக்கு apply பண்ணலாம் என்ற எண்ணத்தில். நான் எந்தவொரு தீர்மானமும் இன்றி சரி என்றேன். அந்த‌ப் ப‌டிப்பின் க‌டைசி ஆண்டில் ஆறு மாதம் ஒரு சிறிய‌ ஆய்வு project செய்ய‌ வேண்டும். அதுவே எனக்குத் தேவையான திருப்பு முனையாக அமைந்தது. அதன் போதே எனக்கு ஆய்வும் ஆய்வுகூடத்தில் வேலை செய்வதும் எந்தளவுக்குப் பிடித்திருந்தது என்று தெரிந்து கொண்டேன். அதுவரை ஓரிடத்தில் 30 நிமிடங்கள் இருந்து பாடம் படிக்கக் கொஞ்சம் கூடப் பொறுமையற்றவள் திடீரென்று நாள் முழுக்க ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்தாலும் அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் மனம் ஒன்றி, enjoy பண்ணியது எனக்கே வியப்பாக இருந்தது.

அதோடு எனக்கே என்னை பற்றிக் கொஞ்சம் தெளிவும் அப்போ தான் வந்தது. நான் அதுவ‌ரை ஒரு போதும் இருந்து நெடு நேரம் ப‌டித்த‌தில்லை. இருந்து, படித்து, அதைப் பின் திரும்ப‌ப் ப‌டித்து, பாட‌மாக்கி செய்வ‌தெல்லாம் என‌க்கு கிட்ட‌த்த‌ட்ட‌ முடியாத‌ காரிய‌மாக‌வே இருந்த‌து. சமயப் பரீட்சைகளில் எப்பவும் வரும் முதல் கேள்வி, ஒரு ஜந்து தேவாரங்கள் தந்து அதில் இரண்டோ மூன்றோ தேர்ந்தெடுத்து முழுதாக எழுத வேண்டும். அதில் ஒரிரு தேவாரங்கள் எப்பவுமே அநேகமாக வரும். அதனால் அவை மட்டுமே எனக்கு முழுதாகப் பாடமாக இருந்தது. அவற்றை மட்டுமே அந்தக் கேள்விக்கு நம்பிச் சென்றிருக்கின்றேன். That's how bad I was. இந்த லட்சணத்தில் 2 1/2 வருடங்கள் படித்து இடையில் ஒரு assessment உம் இல்லாமல் அதன் கடைசியில் 100 வீத‌த்திற்குப் ப‌ரீட்சை எழுதி எப்ப‌டி ப‌ர‌வாயில்லாம‌ல் செய்தேன் என்று என‌க்குத் தெரியாது.

இங்கு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு semester உம் ஆறு மாதங்களே. அதற்குள் கூட பல assignments, tests என்று assessments இருப்பதால் கடைசிப் பரீட்சை 50-60% க்குத்தான். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் சில பாடங்கள் முழுதாக internal assessments ஆகக் கூட உண்டு. அநேக‌மாக‌ எல்லாப் பாட‌ங்க‌ளிலும் நான் க‌டைசிப் ப‌ரீட்சையில் எடுக்கும் புள்ளிக‌ளை விட‌ internal assignments இல் எடுக்கும் புள்ளிக‌ள் மிக‌க் கூடுத‌லாக‌ இருந்த‌து. ஏனெனில் க‌டைசிப் ப‌ரீட்சைக்குப் போகையில் என‌து மூளையில் ப‌திந்திருப்ப‌து அநேக‌மாக‌ வ‌குப்புக‌ளில் lecturers சொன்ன‌தே த‌விர‌, நானாக‌ப் பாட‌ப் புத்த‌க‌த்தை இருந்து ப‌டித்த‌தால் அல்ல. இங்கு கூட எனக்கு மனதிற்குப் பிடிக்காத பாடங்களை just pass பண்ணுவதற்காக மட்டும் படிப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம். இங்கு பாட‌சாலைக‌ளிலும் பாட‌த்திட்ட‌ம் இவ்வாறே. They concentrate more on practical aspects than theoritical aspects. Theories ஜ‌க் கூட‌ அநேக‌மாக‌ப் pracaticals இனூட‌க‌ உண‌ர‌ப்ப‌ண்ணுவ‌தால் பாட‌மாக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் மிக‌க் குறைவு. இப்பாட‌த்திட்ட‌ம் என‌து ம‌னோபாவ‌த்திற்கு மிக‌வும் சார்வாக‌ இருந்த‌து.
இதெல்லாம் யோசித்து தெளிந்த போது இன்னொன்றும் விளங்கியது. மருத்துவத்திற்கு எடுபட்டால் எனக்கு எப்படிப் படிக்க இயலாதோ அப்படிக் கட்டாயம் சில வருடங்களாவது படிக்க வேண்டும் என்று. அதே நேரம் எனக்கு உயிரியல், மருத்துவம் இரண்டும் பிடித்திருந்தது. எனக்கு வாசிக்க, யோசிக்க, பரிசோதனைகள் செய்து கேள்விகளுக்கு விடை காண மிகப் பிடித்திருந்தது. I realised that I am a hopeless passive learner but am very good at active learning, which is what research required.

அப்ப தான் எனக்கு மருத்துவத்திற்கு apply பண்ண புள்ளிகள் இருந்த போதும் எனக்கு அது வேண்டாம், நான் அதே மருத்துவ உயிரியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு apply பண்ணுவதென முடிவெடுத்தேன். I wanted to DO what medical practitioners get to read in their textbooks.

Friday, October 14, 2011

Miss Representation

படம் அமெரிக்க சமூகத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பினும் அநேகமான  சமூகங்களுக்குப் மிகவும் பொருந்தக்கூடிய‌ தொப்பியே.



Miss Representation

Thursday, October 13, 2011

நோபல் சமாதானப் பரிசு 2011

இம்முறை நோபல் சமாதானப் பரிசு அற்புதமான, துணிவான, திறமையான இரு ஆபிரிக்கப் பெண் புரட்சியாளர்களுக்கும் ஒரு மத்திய கிழக்கு நாடான Yemen பெண்ணுக்கும் கிடைத்துள்ளது.

Ellen Johnson Sirleaf - Liberia வின் முதல் பெண் ஜனாதிபதி


Leymah Gbowee - மேற்கு ஆபிரிக்காவில் பெண்களின் அரசியல் சக்தியைக் கூட்டுவதற்காகப் பாடுபடுவர்.



Tawakul Karman - Yemen பெண் விடுதலைப் புரட்சியாளர்


சமூகத்தின் எல்லா நிலைகளையும் விருத்தி செய்ய, ஆண்க‌ளுக்கு ச‌மமாக‌ப் பெண்க‌ளுக்கும் வாய்ப்புகளும் செல்வாக்கும் இல்லையெனில் உலகில் மக்களாட்சியையும் நிலையான சமாதானத்தையும் உருவாக்க முடியாது.

Ellen Johnson Sirleaf ஆபிரிக்காவின் முத‌லாவ‌து ம‌க்க‌ளால் வாக்க‌ளித்து வ‌ந்த‌ பெண் ஜ‌னாதிப‌தி. ப‌த‌விக்கு வ‌ந்த‌து முத‌ல் Liberia வின் ச‌மாதான‌த்திற்கும் பொருளாதார‌, ச‌மூக‌ முன்னேற்ற‌த்திற்கும், பெண்க‌ளின் நிலையைப் ப‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கும் மிகுந்த‌ ப‌ங்க‌ளிப்பு செய்துள்ளார்.Leymah Gbowee இன‌, ம‌த‌ பாகுபாடுக‌ளையும் தாண்டி ப‌ல‌ பெண்க‌ளைத் திர‌ட்டி போரை முடிவுக்குக் கொண்டுவ‌ர‌வும் பெண்க‌ளை வாக்க‌ளிக்க‌ச் செய்ய‌வும் பாடுப‌ட்டார். பின் பெண்க‌ளின் நிலையை உய‌ர்த்த‌ப் போரின் போதும் அத‌ன் பின்னும் வேலை செய்தார்.

அரபியப் புரட்சியின் முன்னும் புரட்சியின் போதும் மிக‌க் க‌டின‌மான‌ சூழ்நிலைக‌ளிலும் பெண்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌வும் ம‌க்க‌ளாட்சிக்காக‌வும் சமாதான‌த்திற்காக‌வும் நடந்த புரட்சிகளிக்கு Tawakul Karman முன்னின்று தலைமை தாங்கினார். இப்பெண்கள் உலகின் பல நாடுகளில் உள்ள பெண்களின் ஒடுக்குமுறியை முடிவிற்குக் கொண்டுவரவும் மக்களாட்சியையும் சமாதானத்தையும் நிறுவப் பெண்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்த்தவும் உதவுவார்கள் என நோபல் பரிசு செயற்குழு நம்புகின்றது.

Wednesday, October 12, 2011

நான் ஒரு விஞ்ஞானி

விஞ்ஞானிகள்/அறிவியளாளர்கள் என நீங்கள் நினைக்கும் போதும் உங்கள் மனிதில் தோன்றும் உருவம் என்ன? உங்களுக்கு பல பிரபலமான/மிகுந்த புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளான நியூட்டன், ஃபரடே, டார்வின் மாதிரியான ஆட்கள் நினைவில் வருவார்களா அல்லது ஒரு வெள்ளை மேற்சட்டை போட்டு ஆய்வுகூடத்தில் மர்மமான வேலைகள் செய்யும் ஒருவரின் உருவம் வருமா? இம்மாதிரி உருவங்களை அடிக்கடி தொலைக்காட்சிகளிலோ வேறு தொடர்பு சாதனங்களின் மூலமோ பார்க்கும் போது இவர்கள் சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டவர்களாகத் தோன்றலாம்.வெள்ளை மேற்சட்டையை எடுத்து விட்டு அவர்களுடன் கதைத்துப் பார்த்தால் அவர்கள் எல்லோரையும் போல் சாதாரணமானவர்களே என்ற முடிவுக்கு வருவீர்கள், என இப்படத்தை எடுத்த பெளதீக‌விய‌லாள‌ர் Stephen Curry கூறுகிறார். இந்தக் குறுகிய படத்தில் அவர் ஆறு வித்தியாசமான விஞ்ஞானிகளுடன் கதைத்து, அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அறிய முயற்சித்துள்ளார். இந்த ஆறு விஞ்ஞானிகளும் மேலை நாட்டவர்கள். எனவே சிறு வயதில் அவர்களை ஆர்வப் படுத்திய, ஊக்கமளித்த காரணங்கள் எல்லாம் எம்மவர்களின் அனுபவங்களிலிருந்து குறிப்பிட்டளவு மாறுபட்டது என நினைக்கிறேன்.அதனால் Stephen Curry அந்த ஆறு விஞ்ஞானிகளைக் கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன். இதே மாதிரி அறிவியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் அவர்களை ஊக்குவித்தது என்ன, எவ்வாறு அறிவியலை உங்கள் தொழில்துறையாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என எழுதினீர்களெனில் நன்றாக இருக்கும். அநேகமானவர்களிடம் அவர்கள் இப்போ இருக்கும் நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என இது பள்ளிச் சிறுவர்களை மனிதில் கொண்டு எடுக்கப்பட்ட படம்.



இது UK இல் உருவாக்கப்பட்ட I’m a Scientist, Get me out of here என்ற‌ திட்ட‌த்தில் இருந்து உதித்த‌து. இத்திட்ட‌ம் ப‌ல்வேறுப‌ட்ட‌ விஞ்ஞானிக‌ளிட‌ம் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் இணையத்தில் உரையாடி அவ‌ர்க‌ளைப் ப‌ர்றி அறிந்து கொள்ள‌ ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இங்கு என‌து வேலைத் த‌ள‌த்திலும் இது மாதிரி 'meet the scientist' என்றொரு திட்ட‌ம் உண்டு. பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தற்கால அறிவியல் முன்னேற்றங்களை விளக்குவதற்காகவும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படையில் அறிவியல் என்ன என்பதை விளக்குவதற்கும் உருவாக்கப்பட்டது. இதிலிருக்கும் 'meet the scientist' திட்டத்தில் மாணவர்கள் விஞ்ஞானிகளை ஒரு 15 நிமிடம் சந்தித்து அவர்களிடம் உரையாடுவார்கள். இதேமாதிரி ஒரு திட்டம் எம்மூர்களில் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன். நான் எப்போதும் சொல்றனான் எமது கலாச்சாரத்தில் பிள்ளைகளின் இயற்கையான ஆர்வம், கற்பனை, சிந்திக்கும் தன்மைகளை முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது என்று. Phil Pait என்ற வானியலாளர் சொன்ன மாதிரி if you teach a man (or woman) to reason, he (or she) will think for a lifetime. மாணவ மாணவிகளுக்கு அறிவியலினூடக சிந்திக்கும் திறமைப் புகட்டினால் அது அவர்களுக்கு மட்டுமல்ல முழுச் சமூகத்திற்கும் மிக்க பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு திட்டம் ஊரில் நிறுவ விருப்பம். பார்க்கலாம்.

பின்வருவது Stephen Curry கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்கள்.

நீங்கள் அறிவியல் தொடர்பான வேலைகளிளோ ஆய்வுகளிலோ ஈடுபட்டிருக்காத வேளைகளில் என்ன செய்வீர்கள்?
  • எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் இப்ப எனக்கு புத்தகங்கள் வாசிக்க நேரம் பெரிதாகக் கிடைப்பதில்லை. வாசிக்க வேண்டுமென வாங்கி வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை தான் கூடிக்கொண்டே போகுது. ஆனால் இணையத்தில் இயலுமானளவு வாசிக்கிறேன்.
  • இயலுமானளவு பிறருக்கு உதவுவது.
  • எனக்கு சமைக்கவும் மிகப் பிடிக்கும். வித விதமான சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப் பிடிக்கும். ஏழு பேர் இருக்கும் வீட்டில் வளர்ந்ததால் கொஞ்சமாக சமைக்க இப்பவும் கஸ்டப்படுவேன். அம்மா சொல்லுவா "ஏதோ கலியாண வீட்டிற்கு சமைக்கிற மாதிரி சமைப்பாள்" என்று.
  • நீண்ட‌ கார்ப் ப‌ய‌ண‌ம் நியூசிலாந்தில் செய்ய‌ப் பிடிக்கும். ஓக்லாந்த்தைத் தாண்டிய‌வுட‌ன் ஆட்க‌ள் பெரிதும் இல்லாத‌, ப‌ச்சைப் ப‌சேலென‌ புல்வெளிக‌ளும் ம‌லைக‌ளும் ம‌ட்டுமே எல்லாப் ப‌க்க‌மும் சூழ்ந்திருக்க‌ கார் க‌ண்ணாடியைத் திற‌ந்து விட்டு த‌மிழ் பாட்டும் கேட்டுக் கொண்டு கார் ஓட‌ மிக‌ மிக‌ப் பிடிக்கும்.
  • காடுக‌ளுக்குள்/ rain forests க்குள் சென்று ஒரு பாதையும் இல்லாம‌ல், எங்கு செல்கிறோமெனத் தெரியாம‌ல் கால் போன‌ போக்கில் நெடுந்தூரம் ந‌ட‌க்க‌ப் பிடிக்கும். Love Bush walking.

நீங்க‌ள் எப்போது முத‌ன் முத‌லில் அறிவிய‌லில் நாட்ட‌ம் கொண்டீர்க‌ள்?
நான் நினைக்கிறேன் முத‌ன் முத‌லில் எப்போது அறிவிய‌ல் ப‌ள்ளியில் ப‌டிக்க‌த் தொட‌ங்கினேனோ அப்போதிருந்தே என்று. ஆனால் அப்ப‌ அநேக‌மாக‌ இர‌சாய‌ன‌விய‌ல் தொட‌ர்பான‌ சிறு சிறு ப‌ரிசோத‌னைக‌ளையே ப‌ள்ளியில் செய்தோம் என‌ ஞாப‌க‌ம். ஒரு ஒன்பது வயதிருக்குமென நினைக்கிறேன், நான் வீட்டிலிருந்த‌ ஒரு அலுமாரியின் கீழ்த்த‌ட்டை என‌து ஆய்வுகூட‌மாக‌ மாற்றியிருந்தேன். :) ஆய்வுகூட‌மென்றால் பெரிசா ஒன்றும் நினைக்காதைங்கோ. ஒரு மெழுகுதிரி, சோடா போத்த‌ல் மூடியைத் த‌ட்டையாக்கி (அதில் தான் என‌க்கு விரும்பிய‌ சாமான்க‌ளைப் போட்டு சூடாக்குவ‌து) ஒரு கத்திரிக்கோல் (this was my bunsen burner :)), ஒரு பெரிதாக்கும் கண்ணாடி (magnifying glass) இந்த‌ மாதிரி வீட்டில் கிடைத்த‌துக‌ளைக் கொண்டு என‌து க‌ற்ப‌னைக் கெட்டிய‌வ‌ரை செய்த‌து. யாருக்கும் பெரிதாக‌க் காட்ட‌வில்லை. But I was absolutely proud of my lab. அப்ப அதற்கு ஆய்வுகூடம் தான் பெயரென்று கூட எனக்குத் தெரியாது. நல்ல காலம் வீடு எரிந்து சாம்பலாகவில்லை.:) நீல CuSO4 ஜ வெப்பமாக்கும் போது நீரெல்ல்லாம் ஆவியாக வேள்ளையாக மாறுவது பார்க்க மிகவும் பிடிக்கும். பொருட்களை வெப்பமாக்கினால் என்னவாகும் (உருகுமா, ஆவியாகுமா, நிறம் மாறுமா) என செய்து பார்க்கப் பிடிக்கும். அப்ப‌ எம்மிட‌ம் தொலைக்காட்சியெல்லாம் இருக்க‌வில்லை. அத‌னால் புத்த‌க‌த்தில் ப‌டிப்ப‌தில் என‌க்குப் பிடித்த‌தை/ செய்யேலுமான‌தை வீட்டில் செய்ய‌ப் பிடித்திருந்தது.இர‌சாய‌ன‌விய‌ல் மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் விஞ்ஞானி என்றெல்லாம் ஒரு வேலை இருக்கென்றே தெரியாது.

உங்களுக்கு nobel prize கிடைத்திருக்கிற‌தா?
:) :) இல்லை.

அறிவிய‌ல் செய்வ‌த‌ற்கு ஒருவ‌ர் மிகுந்த‌ புத்திசாலியாக‌ இருக்க‌ வேண்டும‌ல்ல‌வா?
நான் மிகுந்த‌ புத்திசாலியென‌ ஒருநாளும் நினைத்த‌தில்லை. உண‌ர்ந்த‌தும் இல்லை. அநேக‌மான‌ வேளைக‌ளில் என்னை முட்டாளாக‌வே நினைத்துள்ளேன். என‌க்கு Albert Einstein சொன்ன இரு quotes மிகவும் பிடிக்கும்.
"I have no special talent. I am only passionately curious."
எனக்கு விசேடமான திறமைகள் எதுவும் இல்லை. ஆனால் நான் அறிய மிகுந்த ஆர்வமுடையவன்.
"It's not that I'm so smart, it's just that I stay with problems longer."
நான் புத்திசாலிய‌ல்ல‌, ஆனால் நான் பிர‌ச்ச‌னைக‌ளுட‌ன் நிறைய‌ நேர‌ம் செல‌வ‌ழிப்பேன். அதாவ‌து ஒரு கேள்விக்கான‌ விடையை அறியும‌ட்டும் (அது எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் ச‌ரி) விட‌மாட்டேன்.

இத‌ற்கு ஒரு உதார‌ணம்.நான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தது அவுஸ்ரேலியாவில். எனது முதல் பரிசோதனைக்குத் தேவையான tissues எல்லாம் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால். அங்கு போன முதல் ஆறு மாதத்திலேயே முதல் பரிசோதனை முழுதாகச் செய்து நிறைய முடிவுகள் எடுத்திருந்தேன். நான் பாவித்தது அப்போது ஓரளவிற்கு புதிய தொழில் நுட்பம். அந்த முடிவுகளை எப்படி ஆராய்வது/அதன் பொருள் என்ன என எனது ஆய்வுகூடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.முதல் ஆறு மாதத்தில் எடுத்த முடிவுகளை ஆராய்ந்து விளக்க‌ எனக்கு அடுத்த ஒன்றரை வருடங்கள் பிடித்தன. முதலில் கவலைப்பட்டு, என்னால் செய்ய முடியாது, என்ன இது எதுவுமே தெரியவில்லை எனப் பல தடவை புலம்பிய‌தும் உண்டு. நான் அங்கு த‌னிய‌வே இருந்தேன். என‌து மேற்பார்வையாளர் ஒரு முறை என்னைப் பார்த்து க‌வ‌லைப்ப‌ட்டு இருத்தி வைத்து, எப்படி அறிவியல் ஒரு roller coster ride எனவும், அநேகமானவற்றைப் புரிய பல காலம் எடுக்கும் எனவும், எப்படி நாம் யாரும் ஒருபோதும் கேட்டிராத கேள்விகளைக் கேட்கும் போது அதன் விடை யாருக்கும் தெரியாது ஆனால் அதில் நேரடியாக எவரொருவர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறாரோ அவருக்கே மற்றவர்களைவிட கூடுதல் அறிவு அதில் இருக்கும் எனவும் விளக்கினார். அதன் பின் பலதடவை யோசித்தேன். அந்த முடிவுகளை ஆராயத் தேவையான மென்பொருள் எமது departmental laptop இல் மட்டுமே இருந்தது. அதனால் பலமுறை பின்னேரங்களில் வீடு செல்லும் போது lap top ஜயும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து பல இரவுகள் யோசித்து, ஆராய்ந்து இறுதியில் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் எனது ஆராய்ச்சிக்குப் பதில் (எனது மூளையில் light bulb எறிந்தது :)) கிடைத்தது. அது தான் எனது முதல் Eureka moment. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அறைக்குள் தனிய, யாருடமாவது சொல்லவேண்டுமென்று உடனே அம்மாவிற்கு தொலைபேசி அடித்தேன். அம்மா நித்திரைத் தூக்கத்தில் ஊரிலிருந்து யாராவது அவசரமாக எடுக்கினமோ என எண்ணி வந்து தொலை பேசியை எடுக்க நான் "அம்மா இப்ப தான் முதன் முதலா ஒரு விஞ்ஞானியாக உணர்கின்றேன்" என்று கத்தினேன். அது வரைக்கும் ஆட்கள் "ஒரு தமிழ் பெண்பிள்ளைக்கு ஆராய்ச்சி எல்லாம் சரிவராது. அதுகள் இதுலேயே ஊறி விசராகிடுங்கள், பிறகு குடும்பம் எல்லாம் பார்க்கேலாது" என்ற போது கொஞ்சம் யோசித்த அம்மா, அந்நேரத்தில் அது சரியாகிவிடுமோ என ஒரளவுக்குப் பயம் வருகுதென்றார். :) It trully was an amazing feeling to have figured out something that nobody has before.

"Research is to see what everybody else has seen, and to think what nobody else has thought"
ஆய்வு என்ப‌து எல்லோரும் பார்க்கும் ஒன்றைப் பார்த்து யாரும் சிந்திக்காத‌ ஒன்றை சிந்திப்ப‌து.
Albert Szent-Gyorgyi, Hungarian Biochemist


ஒரு ந‌ல்ல‌ விஞ்ஞானிக்கு என்ன‌ இருக்க‌ வேண்டும்?
அறிய‌ மிகுந்த‌ ஆர்வ‌ம் வேண்டும்.
கேள்விக‌ள் கேட்க‌ வேண்டும்.
பரந்த சிந்திக்கும் தன்மை வேண்டும்.
உங்க‌ள் ஆய்வின் முடிவுக‌ளையே ப‌ல‌முறை உங்க‌ளுக்குள்ளேயே கேள்வி கேட்டுத் தெளிய‌ வெண்டும்.
விடா முய‌ற்சி வேண்டும். அநேக‌மாக‌ ஒவ்வொரு ஆய்வும் தெரியாத‌ ஒரு பாதையில் கால் வைப்ப‌து போல‌வே தொட‌ங்கும். அத‌னால் அநேக‌மாக‌ முத‌லில் எத்த‌னையோ தோல்விக‌ளைச் ச‌ந்திக்க‌ வேண்டிவ‌ரும். அத‌னால் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் க‌ற்க‌க் கூடிய‌தைக் க‌ற்று, விடாம‌ல் முன்னேற‌ வேண்டும். It is a roller coster ride.
க‌டின‌ உழைப்பு வேண்டும்.

Was your PhD fun/Did you enjoy it? உங்களின் ஆய்வு எதைப் பற்றியது?
ஓம். I can honestly say that they were few of my best years in my life. அறிவிய‌லில் நான் க‌ற்ற‌ திற‌மைகள் என்னிலேயே ப‌ல‌ மாற்ற‌ங்க‌ளைக் கொண்டு வ‌ந்த‌து. நான் சாதார‌ண‌மாக‌ப் பார்த்த பல விட‌ய‌ங்க‌ளைப் புதிய‌ கோண‌த்தில் பார்க்க‌ வைத்த‌து. அறிவிய‌ல் செய்யும் போது விருத்தியாகும் திற‌மைக‌ளை பல் வேறு துறைக‌ளில் ப‌ய‌ன் ப‌டுத்த‌முடியும்.

என‌து ஆய்வு endometrium என்றோரு tissue ப‌ற்றிய‌து. க‌ருப்பையின் outer most layer தான் endometrium. இதுவே மாத‌விடாயின் போது உதிர்ந்து பின் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்ந்து/ஒவ்வொரு மாத‌மும் ஒரு க‌ருவிற்கு வீடாகுவ‌த‌ற்கு த‌ன்னைத் த‌யார் செய்து, அவ்வாறு க‌ரு த‌ங்காம‌ல் போகுமிட‌த்து ஒரு சிறு basal layer ஜ‌த் த‌விர‌ ம‌ற்றெல்லாவ‌ற்றையும் முற்றிலும் உதிர்த்து திரும்ப‌வும் அடுத்த‌ cycle இல் த‌ன்னை ஒரு க‌ருவிற்காக‌ த‌யார் செய்ய‌ வ‌ள‌ரும் tissue. உட‌லில் வேறெந்த‌வொரு tissue ஆலும் இவ்வாறு செய்ய‌ முடியாது. இந்த‌ tissues இன் வ‌ள‌ர்ச்சியை estrogen, progesterone எனும் ஒரு ஹார்மோன்க‌ள் க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌. என‌து ஆய்வு ஒவ்வொரு மாத‌மும் endometrium இன் வ‌ள‌ர்ச்சியில் ப‌ங்குப‌ற்றும் ம‌ர‌ப‌ணுக்க‌ளைப் ப‌ற்றிய‌து. அவை எவ்வாறு மாறுகின்ற‌ன‌. Steroid hormones அவ‌ற்றை எவ்வாறு க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌. இவ‌ற்றின் செய்கைக‌ளில் பிழைக‌ள் ஏற்ப‌டின் அத‌னால் வ‌ரும் விளைவுக‌ள் என்ன‌? இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ புதிய‌ முக்கிய‌மான‌ ம‌ர‌ப‌ணுக்க‌ள் ஏதாவ‌து இந்த‌ tissue இன் வ‌ள‌ர்ச்சிக்கு அவ‌சிய‌மா? க‌ருத்த‌ரிக்க‌ முடியாத‌ பெண்க‌ளில் இம்ம‌ர‌ப‌ணுக்க‌ள் எவ்வாறு மாறுப‌டுகின்ற‌ன‌?

அறிவிய‌ல் உல‌கில் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ எல்லாவ‌ற்றையும் க‌ண்ட‌றிந்து விட்ட‌தா?
கொஞ்ச‌மும் இல்லை. இன்னும் நிச்ச‌ய‌மாக‌க் 'க‌ற்ற‌து கை ம‌ண் அள‌வு க‌ல்லாத‌து பிர‌ப‌ஞ்ச‌ம‌ள‌வே'. நாம் செய்யும் ஒவ்வொன்றாலும் ஒரு மிக‌ப் பெரிய‌ புதிரில் மிக‌ச் சிறிய‌ ப‌குதிக‌ளையே க‌ண்ட‌றிகின்றோம். இன்னும் எவ்வ‌ள‌வோ செய்ய‌ இருக்கிற‌து.

Friday, October 7, 2011

Steve Jobs' 2005 Stanford Commencement Address

Thursday, October 6, 2011

40 கிழமைகளில் கிட்டத்தட்ட 18 ± 2 கிழமைகள் முடிந்துவிட்டது :)


"இங்க வாங்கோ பபா ஒண்டு சொல்லோணும்!அம்மான்ட tummy க்குள்ள ஒரு குட்டி T.rex இருக்கு." என்று அகரன் தான் முதலில் எமது குடும்பத்தாரிடம் தெரிவித்தான். :) உறுதிப்படுத்தியபின் அவனிடம் சொன்ன போது அதை பெரிய serious ஆக எடுத்ததாகத் தோன்றவில்லை. ஆனால் இப்ப அநேகமாகக் கதைப்பது இதைப்பற்றித் தான். அடுத்த நாள் Kindy முடியக் கூட்டச் சென்றபோது அவனது ஆசிரியைகள், "So is the rumour we are hearing from Aharan true?" I was like "what did he tell you?" That you have a baby in your tummy!


இப்போ கேட்கும் கேள்விகள்:

குட்டி பபா எப்ப வெளியே வரும்?

குட்டி பபா boy ஆ girl ஆ? ஆனால் யாரும் உங்களுக்கு தங்கச்சியா தம்பியா வேணும் எனக் கேட்டால் வரும் பதில், "பபாக்கு நாய்க்குட்டி தான் வேணும்." ?! (தன்னை பபா என்றே சொல்வான்.)

குட்டி பபா ஏன் அம்மாவின் tummy இல் மட்டும் இருக்கு, அப்பாவின் tummy இல் ஏன் இல்லை?

குட்டி பபா என்ன சாப்பிடும்? இதற்கு நான் "குட்டி பபாக்கு இன்னும் சாப்பிடத்தெரியாது. அம்மாவின் tummy இலிருந்து பபாவின் tummy க்கு ஒரு குழாய் இருக்கு. அம்மா சாப்பிடும் சாப்பாடு அந்த குழாயால் பபாவிற்குப் போகும் என்றேன். அதோடு பபா தண்ணியிலே தான் இருந்து வளர்கிறது என்றேன்". அண்மையில் ஒரு சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தான், "சித்தி, அம்மான்ட tummy இல நிறையத் தண்ணி இருக்கு. குட்டி பபா அதிலதான் swim பண்ணிட்டிருக்கு".:)
 

எங்காவது நாம் வெளியில் போய் திரும்பியதும் யாருடன் போனனீங்கள் என்று கேட்டால் வரும் பதில், "அம்மாவோட, அப்பாவோட, குட்டி பபாவோட." :)

அதோடு பபா தான் குட்டி பபான்ட அண்ணா அன்றும் எல்லோருக்கும் அறிவித்தாயிற்று.

"நான் இனி சின்னன் இல்லை. வளந்திட்டன். நான் அண்ணா!"

it's quite amazing to see his excitement.