Monday, June 20, 2011

அப்பா...

இங்கு September முதல் ஞாயிறே தந்தையர் தினம். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் நேற்றுப் போலுள்ளது. எனது அப்பாவைப்ப்ற்றி எழுதவேண்டுமென சிறிது காலமாக யோசித்துக் கொண்டிருந்ததால் இந்தப் பதிவு.

He truly is one of a character. என்ன சூழல் எனினும், வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்ற உறுதி கொண்டவர். யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர். So much so, அப்பம்மா, மாமி, சித்தப்பா, பெரியப்பா வுக்கே அப்பாவுடன் கதைக்கப் பயம்.

நிச்சயமாக எந்தப் பெண்ணும் இவரைத் திருமணம் செய்ய முன்வரப் போவதில்லை/ அப்படியே முதல் ஒத்துக் கொண்டாலும் பின் நிச்சயமாகத் தொடர்ந்து அவளால் ஒன்றாக வாழவே முடியாது என எல்லோரும் நினைத்தார்களாம். அதனால் யாரும் பெரிதாக அப்பாவிற்குத்திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவேயில்லை எனலாம். அப்பாவே அவ்வாறு தான் நினைத்திருந்தார். He was fairly certain that no woman could stay married to him.

அப்போ அப்பாவிற்கு வயது 35. இக்காலகட்டத்தில் அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி எமது அம்மாவின் தோழி. அம்மாவும் அவரும் வவுனியாவில் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அம்மாவுக்கும் வயது 28 ஆகியிருந்தது. அம்மாவிற்கு பல குடும்பச் சிக்கல்கள், பிரச்சனைகளால் திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் பெரிதாக இருக்கவில்லை. அம்மாவின் தோழியும் அப்பாவின் நண்பரும் தான் இருவரையும் கதைத்துப் பொருத்தம் வருமா என யோசிக்கச் சொன்னவை.

அப்பா அம்மாவிடம் சொன்னது:
"நான் மிகவும் எளிமையானவன். போலிகளை வெறுப்பவன். எனக்கு இந்த முகப் பூச்சு, nail polish, சோடனைகள் எதுவும் துண்டறப் பிடிக்காது. அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வீண்செலவு செய்யக்கூடாது.

நீங்கள் படித்தவர் என்பதற்காக உங்களை இளவரசியாக வைத்திருக்க என்னால் முடியாது. :) எனக்கு ஒரளவிற்குப் பெரிய குடும்பம் அவர்களைப் பார்க்க வேண்டும்.  த‌மிழிழேயே எப்போதும் கையெழுத்திட‌ வேண்டும். ஆடம்பரமான வாழ்வு பிடிக்காது. எப்பவும் சைக்கிள், பஸ், தேவையாயின் Train அவ்வளவுதான் ", என்று பல conditions.

அம்மா சொன்ன‌து த‌ன்னால் சீத‌ன‌ம் த‌ர‌ முடியாதென‌ ம‌ட்டுமே.

For some reason, திருமணம் முடிந்ததும் வேலையை விடலாமா எனவும் அம்மாவிடம் கேட்டுள்ளார். ஏனெனத் தெரியவில்லை. ஏனெனில் பின் அம்மாவை எப்போதும் வேலையை விடச் சொல்லிச் சொன்னதில்லை என்பதோடு வேலையில் மேன் மேலும் உயரவும் அப்பா தூண்டியவர். ஏன் அவ்வாறு சொன்னார் என்பதைக் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவும் சம்மதித்து விட்டார். அதன் பின் அப்பம்மாவிடம் அம்மா இதைச் சொன்னபோது அப்பம்மா, "இந்த மூஞ்சூறு சொன்னதென்பதற்காக நீ வேலையை எல்லாம் விட்டுடாதை பிள்ளை." :) இது சொன்னது mid 1976 இல். I think appamma is one of the coolest mother-in-laws.

அப்பாவிற்குத் தனது கௌரவமும் முக்கியமாக இருந்தது. அதனால், அம்மாவிடம் "என்னுடன் வாழ்வது மிகக் கடினம். தயவு செய்து கவனமாக யோசித்து முடிவு சொல்லுங்கோ. நீங்கள் என்னைத் திருமண‌ம் செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை. திருமணப் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் கூட வேண்டாமென்று சொல்லலாம். ஆனால் கையெழுத்திட்டால் அவ்வளவுதான். அதற்குப் பிறகு விவாகரத்தென்றால்லாம் பேச்சே இருக்கக் கூடாது. இருவருக்கும் ஒத்துவராவிட்டால் ஒரே வீட்டில் நீங்கள் ஒரு அறை, நான் ஒரு அறையில் இருப்பம் ஆனால் வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது." என்றும் சொன்னாராம். :)

இதெல்லாம் இப்போ யாரிடம் சொன்னாலும் அவர்கள் அம்மாவிடம் முதல் கேட்கும் கேள்வி, இவ்வளவும் சொன்னதற்குப் பிறகு எப்பிடி ஓம் என்று சொன்னனியள் என்று. அம்மாவின் புன்னகையுடன் கூடிய ஒரே பதில் "அவர் நல்லவரென எனக்குத் தெரிந்திருந்தது." :)

அப்பாவிற்கு தேவையற்றவையில் நேரம் வீணாக்குவது பிடிக்காத விடயம். சமையலுக்குக் கூட எவ்வளவு குறைய நேரம் எடுக்கேலுமோ அவ்வளவே எடுக்க வேண்டும். சமைத்த சாப்பாடு விருப்பமில்லை என்று நாம் சாப்பிடாவிட்டால் அப்பா எப்போதும் சொல்வது "நீ சாப்பிடவதற்காக வாழ்கிறாயா வாழ்வதற்காக சாப்பிடுகிறாயா, நான் வாழ்வதற்குத் தான் சாப்பிடுகிறேன்", என்பார். எனக்குச் சமைக்க மிகப் பிடிக்கும். நான் தற்சமயம் கொஞ்சம் கூடுதல் நேரம் சமையலறையில் இருந்தால் கூட, "உருப்படியாகச் செய்வதற்கு உங்களுக்கு வேற‌ ஒன்றுமே இல்லையா", என்பார்.

எனக்கு ஒரு நான்கு அல்லது ஜந்து வயதிருக்கும். யாருடையதோ வீட்டிற்கு சென்றபோது அவர்கள் எனக்கு நகச் சாயம் பூசிவிட்டிருந்தனர். வீட்டில் அப்பா அதைப் பார்த்து விட்டு என்னைக் கூப்பிட்டு, " இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா" என்று கேட்டார். ஜந்து வயதுப் பிள்ளை என்ன சொல்லும்? ஓம் என்றேன். அதற்கு அப்பா, " சரி, உலகத்தில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் உங்களுக்கு நகப் பூச்சு வாங்கித் தருகின்றேன். பூசிக்கொள்ளுங்கள், ஆனால் அதற்குப் பின் என்னை அப்பா எனக் கூப்பிடக் கூடாது" என்றார். :) அம்மா, " இந்த வயதில் அவளுக்கு என்ன விளங்குமென இப்பிடிச் சொல்லுறியள்" என்றது மட்டும் நினைவில் உள்ளது. அதன் பின் அடுத்த 15 வருடங்களுக்கு எனக்கு நகச்சாயங்களைத் தொடவே பயம். :) ஒரிரு தடவைகள் மற்றையவர் வீடுகளில் அடித்துப் பார்த்து விட்டு உடனே அழித்திருக்கின்றேன். I sincerely believed appa was going to disown me.
பல சமயம் வெளியில் போகும் போது, அப்பாவிடம் வேறு ஒரு உடை உடுத்துங்கள் என்றாலோ வேறேதாவது மாற்றங்கள் சொன்னாலோ, அவரது ஒரே பதில், "நான் இப்படித் தான் வருவேன். உங்களுக்கு என்னுடன் வர வெட்கமாக இருந்தால் நான் உங்கள் அப்பா என்று யாரிடமும் சொல்லத் தேவையில்லை, வேலைக்காரனென்றே சொல்லலாம்". :) (அம்மாவும் இதே பதில் சொல்லுவா). ஒரு உடை கிழிந்து கடைசியில் போடவே முடியாதெனும் வரையிலும் போடுவார். Reduce, Reuse, Recycle என்றால் என்ன என்று எமக்குத் தெரிய முதலே அப்பாவிடமிருந்து பழகியாச்சு. மாம்பழத்தோல், நாம் சாப்பிட்ட மீதி, மிஞ்சிய பழைய சாப்பாடு என்று எமது அம்மாவும் அப்பாவும் கிட்டத்தட்ட குப்பைத் தொட்டிகளுக்கே ஒப்பிடலாம். தேங்காய்ப் பால் பிழிந்ததும் விடுபடும் தேங்காய்ப் பூவைக் கூட  எறிய வேண்டாம் என்பார்.

He was obsessed with education. கல்விதான் எமது நிரந்தர சொத்து, அதுவே உங்களைக்குக் கடைசி வரையும் உதவும் என்பார். நாம் இருந்த வீடு முற்றுமுழுதாக இந்தியன் ஆமியால் எரிக்கப்பட்ட பின்னர், யாழ் இருக்கப் போனோம். அங்கு இருக்கப் போன‌ காரணம் தன் பிள்ளைகள் நடந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வசதியாக இருக்கும் என்று சொன்ன போது, அவரின் மூத்த மகளான எனக்கு வயது 10. நாம் நியூசிலாந்திற்கு வந்த பின் அம்மாவிற்கே தெரியாமல் அம்மாவை Auckland University இல் masters செய்ய enrol பண்ணி, அம்மாவிற்கு approve பண்ணி ID card வந்ததும் மிக மிகச் சந்தோசப்பட்டார்.
அவரின் பிறந்து வளர்ந்த ஊரான சாவகச்சேரியை மிக மிகப் பிடிக்கும். இங்கு கூட citizenship எடுக்கவில்லை. ஏனெனக் கேட்டால், "நாம் இவளவை தங்கட காலில் நிற்கும் மட்டும் தான் இங்கே இருப்பன். பிறகு நான் ஊருக்குப் போய் விவசாயம் செய்யப்போறன்" என்பார். அவரின் ஆசை நிறைவேறவேயில்லை. :(

தன் துறையில் மட்டுமல்லாது பல துறைகளைப் பற்றித் தெரிந்தவர். தான் பார்க்கும் எல்லோரிடமும் தன்னிடம் வரும் எல்லோரிடமும் முடிந்தளவு படியுங்கோ, அத‌ற்கு எந்த உதவியும் செய்வேன் என்றே கூறுவார்.

தனக்கு எது சரி என்று பட்டதோ அதையே செய்யும் தைரியமுடையவர். சமூகம் சொல்கிறதென்பதற்காக எதையும் செய்யவில்லை. நாம் பிறந்த நாளிலிருந்து எமக்காகவே வாழ்ந்தவர். அப்பாவிற்கு நன்றிக்கடன் ஒரு நாளும் செலுத்தி முடியாது. I will give anything to have him here with us. சாத்தியமற்றது எனத் தெரிந்த போதும் எனக்கு என்ன பிள்ளை பிறக்கப் போகிறது எனத் தெரிவதற்கு முன்பே பலர் உங்கட அப்பா தானே வரப்போறார் என்ற போதும், அப்பாவின் ஒரு நண்பர் என் மகனை அப்பாவின் பெயர் சொல்லிக் கூப்பிடும் போதும் எனது மச்சாள் அப்பாவைக் கூப்பிடுவது போன்றே என் மகனையும் அத்தை மாமா என்று சொல்லும் போதும் அப்பாவை மாதிரியே அவன் இரு கைகளையும் பின்னுக்குக் கட்டிக் கொண்டு நிற்கும் போதும் இரு கைகளையும் சமமாகப் பாவிக்கும் போதும் (ambidextrous) மகிழ்ச்சியாக‌ இருக்கும்.
 
தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

4 comments:

Thekkikattan|தெகா said...

Wow!... outstanding dad :)

இருங்க பொறுமையா வந்து இன்னும் சிலாகிச்சு பேசுறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நடந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வசதியாக இருக்கும் என்று சொன்ன போது, அவரின் மூத்த மகளான எனக்கு வயது 10/ என்ன ஒரு முன் யோசனை.. அத்தனைக்கு இன்று நீங்கள் படித்து விவரமாய் பேசக்கூடியவரானது தான் நீங்கள் திருப்பி செய்யக்கூடியதும் செய்துவிட்டதும் என்று நினைக்கிறேன்.:)

தருமி said...

நல்ல கலவையான பதிவு. உணர்ச்சிகளும் நினைவுகளும் நன்கிருந்தன.

என்னைப் போல் அப்பம்மா என்று கூப்பிடும் இன்னொருவரைப் பார்த்தது நன்றாக இருக்கிறது.

//
Hopefully பரிணாமத் தொடரை விரைவில் தொடருகின்றேன்//
நல்லது.

தருமி said...

நல்ல கலவையான பதிவு. உணர்ச்சிகளும் நினைவுகளும் நன்கிருந்தன.

என்னைப் போல் அப்பம்மா என்று கூப்பிடும் இன்னொருவரைப் பார்த்தது நன்றாக இருக்கிறது.

//
Hopefully பரிணாமத் தொடரை விரைவில் தொடருகின்றேன்//
நல்லது.