Showing posts with label கருக்காலம். Show all posts
Showing posts with label கருக்காலம். Show all posts

Monday, January 30, 2012

முதற் பிரசவக் கதை - இறுதிப்ப‌குதி

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

19 ஆம் திகதி ஆவணி 2008 காலை 11.17 க்கு ஒரு மாதிரி குழந்தையைப் பாதுகாப்பாக வேளியேற்றியாயிற்று.
அதன் பின் பனிக்குடத்தையும் வேளியேற்றி, பிரிஞ்சதெல்லாம் தைச்சு, இரத்தம் ஏற்றி என்று என்னையும் ஒரு வழி பண்ணி maternity ward இல் கொண்டு போய் விட பின்னேரம் ஆகிவிட்டது.

Thursday, January 26, 2012

முதற் பிரசவக் கதை - 2


வலி கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது. இன்னும் சவ்வு உடையவில்லை. இன்னொரு தடவை சோதனை செய்து பார்த்து கருப்பை வாய் கிட்டத்தட்ட 4 cm விரிவடைந்து விட்டதென midwife சொன்னார். அதன் பின் assessment unit இலிருந்து delivery unit க்குச் செல்லம் என்றனர். சரியென நடந்து அங்கு சென்றோம். சிலருக்கு தண்ணீரில் இருந்து பிள்ளை பெறுவது சில வேளைகளில் இலகுவாக இருப்பதால் Delivery unit இல் சில அறைகளில் bath tub இருக்கும். அவ்வாறு bath tub இருக்கும் அறை ஏதாவது யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் அங்கே விடும் படி முதலே கேட்டிருந்தேன். அதுவும் சுடுநீரில் இருந்தால் கொஞ்சம் வலியின் உணர்வு குறையும் என்பதாலேயே. அப்படி ஒரு அறை இருந்ததால் அங்கேயே என்னை விட்டனர்.

Tuesday, January 24, 2012

முதற் பிரசவக் கதை - 1

தற்போதைய பிரசவத்திற்குத் தரப்பட்ட நாளிற்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு கிழமைகளே இருக்கிறது. இந்நிலையில் முதல் பிரசவம் எப்படி நடந்ததென்பதை எழுதத்தோன்றியது, அதனால் இந்தப்பதிவு.