TIme Magazine cover - April 1967
பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளின் பாவனை முதன் முதலாக 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டது. அன்றே முதன் முதலாகத் திட்டமிட்ட பிள்ளை வளர்ப்பும் (planned parenthood) பெண்களால் தமக்கு எப்போ பிள்ளை பிறக்க வேண்டுமென்பதைத் தாமே கட்டுப்படுத்துவதும் சாத்தியமானது. இந்த இரண்டாவது
காரணத்திற்காகவே இன்னும் பல கலாச்சாரங்களிலும் சமயங்களிலும் இம்மாத்திரை பயன்படுத்துவது வரவேற்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, முற்றாகத் தடை கூடச் செய்யப்படுகிறது. அதே நேரம் மற்றைய எதிர் முனையில் சிறிதும் மருத்துவர்களுடன் கலந்துரையாடாமல் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டவாறு இனப்பெருக்க வயதில் இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் சில சமயம் கொடுக்கப்படுகிறது. இரண்டுமே மூட நம்பிக்கைகளின் உச்சக் கட்டங்கள். வரலாற்றையும் சமூக, கலாச்சார நோக்குகளையும் மேலும் அலச முன் இம்மாத்திரைகளுக்குப் பின்னாலிருக்கும் அறிவியலையும் அவை எவ்வாறு வேலை செய்கின்றன எனவும் பார்ப்போமா? இம்மாத்திரைகளே இன்று கருக்கட்டலைத் தடுப்பதற்கு உலகில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். 50 வருடங்களில் இந்த மாத்திரை பல பல ஆய்வுகளுக்கும் அதனூடாக பல திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு இன்று உபயோகத்திலுள்ள மாத்திரைகள் உருவாக்கப்பட்டன.
